சனி, 2 பிப்ரவரி, 2019

வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியாருக்கும் சிங்கம்பட்டி மறவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்கள்

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் வேலு நாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் தாயாரும், மனைவியும் வேலுநாச்சியார் பிறந்த ராமநாதபுர சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே.

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து பின் அவர் மறைவிற்குப் பின் சிவகங்கை சமஸ்தான ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆங்கிலேயர்களை வென்று அரியணை ஏறியவர் வீரமங்கை வேலுநாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் மகள் சிவகங்கை சமஸ்தான T.S..கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜாவிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களது மகளான திருமதி.T.S.K. மதுராந்தகி நாச்சியாரே தற்போதைய சிவகங்கை சமஸ்தானத்தின் ராணி ஆவார்.

1986 முதல் சிவகங்கை சமஸ்தான ராணியாக இருந்து வரும்  டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் சிலகாலம் தனது தாய்வழி தாத்தாவான நமது ராஜாவின் அரவணைப்பில் சிங்கம்பட்டி அரண்மனையில் வளர்ந்தவர் ஆவார். மேலும் தாய்மாமனான சிங்கம்பட்டி இளைய ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்தார் T.N.S முருகதாஸ் தீர்த்தபதியார் -சேதுபர்வதவர்தினி நாச்சியாரின் தவ புதல்வர் மதிப்பிற்குரிய 32-வது சிங்கம்பட்டி பட்டத்துக்காரர் T.N.S.M.சங்கர ஆத்மஜன் ராஜாவை மணந்துள்ளார்.

சிங்கம்பட்டி - சிவகங்கை இரண்டு சமஸ்தானங்களுக்கும் ராணியான வாழும் வேலுநாச்சியார் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் கம்பீரமான தோற்றம் கொண்டவர். யாருக்கும் அஞ்சாத ஆளுமைத் திறன் கொண்டவர். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் தேவஸ்தான கோவில்களை சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறார் எமது இளைய ராணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக