திருக்குறுங்குடி இறைவன்
ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ஸ்வாமி
குளுமை வாய்ந்த களக்காடு மலை வந்திறங்கி
சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி ஸ்நானம் செய்து
தேக உஷ்ணத்தை தணித்து
ஆற்றங்கரை பாறையில்
சங்கிலியால் ஓங்கி அடித்து
ஒரு கசத்தை உருவாக்கி
நம்பியாற்றின் கரையில்
மூன்று நிலையங்கள் அமைத்து அமர்ந்தார்
சங்கிலியால் ஓங்கி அடித்த சப்தத்தால்
கடும்பாறை ஆனது
பொடிப் பொடியாகி
கசத்தில் நம்பியாற்று நீர்
பொங்கி வரும் பிரவாகமாய்
பெருக்கெடுத்து சலசலத்து
ஓடும் சப்தமதை கேட்டு
மலை நம்பி பெருமாள்
கோவிலை விட்டு வெளிவந்து
பூதத்தாரை நீர் யார் என்று வினவ
சட்டநாதன் ஆன சங்கிலி பூதத்தாரும்
யாம் சிவபுத்திரன்
பார்வதி தேவி என் அன்னை
நீங்கள் என் தாய்மாமா
நான் உங்கள் மருமகன் என்றே இனிதே செப்பி
அனைத்து விவரங்களும் கூற
பெருமாளும் தாயாரும்
அகமகிழ்ந்து பூதத்தாரின் வயிற்றுவலியை குணமாக்கி ஆசி வழங்கி
திருக்குறுங்குடியில் உள்ள
கீழ்நம்பி கோவிலுக்கும் ஊருக்கும் காவலாக இருக்க சொல்லி அனுப்பினர்
ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட
கீழ்நம்பி பெருமாளும்
பூதத்தாருக்கு
திருக்குறுங்குடி கோவிலையும் ஊரையும் சுற்றி
ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்திய பூசைகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்
அவை என்னென்ன நிலையங்கள் என்றால்
1) கோவிலிலே ஒரு நிலையம்
2) குடவரை வாயிலில் ஒரு நிலையம்
3) பிரதான வாயிலில் ஒரு நிலையம்
4) மடப்பள்ளியில் ஒரு நிலையம்
5) தெற்கு மதிலில் ஒரு நிலையம்
6) அமரேத்து மண்டபத்தில் ஒரு நிலையம்
7) தேரடியில் ஒரு நிலையம்
இப்படியாக ஏழு நிலையங்கள் எழுந்தருளி
அமர்ந்தார் எங்கள் இறைவன்
சட்டநாதா சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக