ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

ஸ்ரீ மாடசாமி துணை

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

சிங்கம்பட்டி ஜமீன் வகையறாக்கள்

பாகம்:-1

சுமார் 400-வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு மதுரை ஜில்லா திண்டுக்கல் தாலுக்கா சத்திரப்பட்டி என்ற ஊரில் #கொத்துத்தாலி மறவர் இனத்தை சேர்ந்த ஸ்ரீமான் சிவசுப்புத்தேவர் என்பவர் வாழ்ந்துவந்தார்....

இவருடைய மனைவி பெயர் மீனாட்சி அம்மாள் இவர்களுக்கு நான்கு புத்திரர்கள்..

சங்கரலிங்கத்தேவர்

மாடப்பத்தேவர்

வன்னியபெருமாள்த்தேவர்

சின்ன மாடப்பத்தேவர் இவர்களுடைய

குடும்ப குலதெய்வங்கள்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன்

ஸ்ரீ தாமரையுடையார் சாஸ்தா

ஸ்ரீ மாடசாமி

இவர்கள் நான்குபேரும் வளர்ந்துவரும் காலத்தில் தங்களுடைய குலத்தெய்வங்களையும் பழனியில் உள்ள ஸ்ரீ முருகப்பெருமானையும் தரிசித்து வாழ்ந்து வந்தார்கள்...

ஒரு நாள் ஸ்ரீ முருக பெருமானை தரிசித்து விட்டு வரும் வழியில் தொண்டைமான் நகரத்தை ஆட்சி செய்துவரும் ஸ்ரீமான் புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ பாஸ்கர தொண்டைமானும் முருக பெருமானை தரிசிக்க வந்தார்..

தேவர் மக்கள் நால்வரையும் கண்டார்... இவர்களது உடல் பலம் வீர தீரத்தை கண்டு தனது அரண்மனைக்கு போர்ப்படை தளபதிகளாக இருக்க அழைத்தார்...

(கதை தொடர்ச்சி பாகம்: 2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக