புதன், 6 பிப்ரவரி, 2019

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வென்னி உடையார் சாஸ்தா

ஸ்ரீ புலிமாடசாமி துணை

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

சிங்கம்பட்டி ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் தேவரின் ஐந்து புதல்வர்களில் முதல் இருவர் சந்ததிகள் இராதாபுரத்திலும் மூவர் சந்ததிகள் கீழ்ப்புலியூர் ,கருங்காடு, கோபாலசமுத்திரம் ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்...

மூத்தவர் ஸ்ரீ பெரியணைந்த பெருமாள் தேவர் குடும்பத்திற்கு பிரம்மராட்சகை அம்மனும்

நடுவர் குடும்பத்திற்கு முன்னடி, முருகன் இருளமாடன் ,சிவனணைந்த பெருமாள் போன்ற தெய்வங்களும்

இளையவர் குடும்பத்திற்கு புலிமாடன், வில்லுமாடன் ,விடுமாடன், தவசி தம்புரான் சுடலைமாடன், போன்ற தெய்வங்களும் தனி பூசை செய்துக்கொள்ளும் உரிமை சேர்ந்தது....

மாடசாமி ,பேச்சியம்மாள் ,முப்பிடாதி போன்ற தெய்வங்களை பொதுவான முறையில் வணங்கினார்கள்....

இதில் மாடசாமி களக்காடு படலையார் குளத்திலும் பிரம்மராட்சகை அம்மன் போன்ற தெய்வங்கள் சிங்கம்பட்டியில் இருந்தும் பிடிமண் எடுத்து பூடங்கள் அமைக்கப்பட்டது....

இராதாபுரம் கல்யாணி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் வெட்டச்சென்றதற்காக கொடைவிழா நடக்கும் பொழுது இரண்டுகோட்டை நெல்லும் பூஜை பொருட்களும் மானியமாக வழங்கப்படுகிறது.....

1 கருத்து: