ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

பாகம் :2

பாகம் :2

தேவர் மக்கள் நான்கு பேரும் சரி என்று சம்மதம் சொல்லி தனது அப்பா அம்மாவிடம் அனுமதி பெற்று தங்கள் குலதெய்வங்கள் உடன் அழைத்து சென்றார்கள்....

ஸ்ரீ துர்க்கை அம்மனை ஒரு வெண்கலப்பெட்டியிலும் ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ மாடசாமி உடன் புதுக்கோட்டைக்கு கூட்டி சென்றார்கள்..

தொண்டைமான் அரசவையில் போர்ப்படை முதன்மை தளபதிகளாக செய்து கொண்டு தங்கள் குலதெய்வங்களுக்கு பூஜை செய்து வாழ்ந்து வந்தார்கள்..

சில நாட்கள் சென்ற பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்கும் ஆவல் அவர்களுக்கு வந்தது அதன்படி தொண்டைமான் மன்னனிடம் உத்தரவு கேட்டார்கள்...

மன்னனும் சம்மதம் சொல்லி சீக்கிரம் சென்று வாருங்கள் என்று உத்தரவு கொடுத்தார்...

தேவர் மக்கள் நான்கு பேரும் தங்கள் குலதெய்வங்களை அழைத்து கொண்டு கன்னியாகுமரி கிளம்பினார்கள் வரும் வழியில் தங்குகின்ற இடமெல்லாம் தெய்வங்களை தரிசித்து வருகிறார்கள்...

பழனி முருகனை தரிசித்து விட்டு மதுரை வழியாக ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்கள்...

அடுத்து திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்தார்கள் அடுத்து விருதுநகர் வந்து சிவன்கோவிலில் தரிசனம் செய்தார்கள் ....

அடுத்து சாத்தூர் வழியாக இருக்கண்குடி சென்று ஸ்ரீமாரியம்மனை வணங்கினார்கள் அடுத்து கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவள்ளி அம்மனை தரிசித்தார்கள்....

அடுத்து கயத்தார் ஸ்ரீ அகிலாண்ட அம்மனையும் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவிலும் தரிசனம் செய்தார்கள்....

அடுத்து ஸ்ரீ செங்கலமுடையார் சாஸ்தாவை வணங்கி புதுக்குடி வந்து மேற்கு திசை நோக்கி திரும்பினார்கள்....

வரும் வழியில் ஸ்ரீ விட்லமுடையார் சாஸ்தாவை வணங்கி வழிப்பாட்டுக்கு செழியநல்லூர் வந்தடைந்தார்கள்....

வடக்கு செழியநல்லூர் அருகே ஒரு மைதானத்தில் தங்கினார்கள் சூரியன் மறைந்ததால் அம்மனை அங்கு வைத்து பூஜை நடத்த சித்ரா நதியில் குளிக்க வருகிறார்கள் .....

அதே நேரத்தில் செழியநல்லூர் நகரை ஆட்சி செய்து வரும் உக்கிர பாண்டியன் மன்னன் தேவர் மக்களை கண்டு அவர்களை பற்றி விசாரித்தார் ...

அவர்கள் நான்குபேரும் தங்களுடைய ஊர் மற்றும் வரலாறுகளை சொல்கிறார்கள் தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட போவதாக கூறுகிறார்கள்.

செல்லும் வழியில் பொழுது சாய்ந்ததால் வடக்கு செழியநல்லூரில் குளித்து முடித்து விட்டு அம்மனுக்கு பூஜை செய்ய இருக்கிறோம் என்று கூறினார்கள்.

அவர்களை உக்கிரபாண்டிய மன்னன் தன்னுடைய அரண்மணையில் தங்கும்படி வற்புறுத்தினார் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கும் வசதியும் மற்றும் வரலாறு பட்டயமும் செய்து தருவதாக கூறினார்.

மூத்தவர்கள் இருவரும் தங்க சம்மதித்தார்கள் இளையவர்கள் இருவரும் கன்னியாகுமரி செல்வதில் முடிவாக இருந்தார்கள் அப்போது வன்னியபெருமாள்த்தேவரும் சின்ன மாடப்ப தேவரும் அம்மனை தங்களால் தூக்கி செல்லமுடியாது நீங்கள் பூஜை செய்யுங்கள் அவர்கள் சென்றார்கள்..

தற்போது இளையவர்கள் சந்ததியினர் கன்னியாகுமரி அருகில் உள்ள தெற்கு கருங்குளத்தில் வாழ்ந்துவருகிறார்கள்..

மூத்தவர்கள் பெட்டி இருக்கும் இடத்தில்
ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ துர்க்கை அம்மனையும் வைத்து பூஜித்தார்கள் பின்பு ஸ்ரீ மாடசுவாமிக்கு தெற்கு செழிய நல்லூரில் கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா கோவிலில் உத்தரவு கேட்டார்கள்... செழியநல்லூர் ஊருக்கு மேற்கே கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா உத்தரவு கொடுக்க #ஸ்ரீசிவக்கொழுந்து (சிவனணைந்த பெருமாள்) ஸ்ரீ மாடசாமி ஸ்ரீ மாடத்தி அம்மன் ஸ்ரீ பேச்சி பிரம்மசக்தி அம்மன்
#ஸ்ரீபலவேசக்காரசுவாமி மற்றும் ஸ்ரீகோழி மாடசாமி போன்ற தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள்...

ஒவ்வொரு வருடமும் ஆனி ஆடி மாதத்தில் கொடைவிழா நடக்கும்பொழுது வியாழக்கிழமை சாயங்கால நேரத்தில் சித்ரா நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கும்பம் ஏற்றி குடி அழைப்பு பூஜை நடத்தி ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தாவை வணங்கி வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கல் வைத்து செங்கிடாய் பலிகொடுத்து சிவ கொழுந்து சுவாமியை பூஜை செய்து வணங்கி வெள்ளிக்கிழமை மதியவேளையில் பொங்கல் வைத்து ஆட்டுக்கிடாய் பலிகொடுத்து ஸ்ரீ மாடசாமியை பூஜை செய்து வணங்குவார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு வேளையில் புழுங்கல் அரிசியில் படையலிட்டு ஆடு மற்றும் கோழி கறி வைத்து ஆட்டு கிடாய் பலியிட்டு வில்லிசை மற்றும் மேளதாளங்களுடன் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக